
கோவை: இந்திய மாணவர் சங்கத்தின் (எஸ்எஃப்ஐ) 27-வது தமிழ் மாநில மாநாடு திருப்பூர் மாவட்டம் செங்கப்பள்ளியில் கடந்த 3 நாட்களாக நடைபெற்றது. முதல் நாள் நிகழ்வில், பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
பேரணியில் அகில இந்திய தலைவர் ஆதர்ஷ் எம்.ஷாஜி, துணைத் தலைவர் மிருதுளா, மாநில தலைவர் சம்சீர் அகமது உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இரண்டாவது நாள் நிகழ்வில், அகில இந்திய பொதுச்செயலாளர் ஸ்ரீஜன் பட்டாச்சார்யா உள்ளிட்டோர் பேசினர்.