
மதுரை: பெண்ணின் நெஞ்சில் குத்தி இதயம் வரை சென்ற ஊசியை, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை மருத்துவர்கள் பல மணி நேரம் போராடி வெற்றிகரமாக அகற்றினர். மருத்துவக் குழுவினரை டீன் அருள் சுந்தரேஷ்குமார் பாராட்டினார்.
நாகப்பட்டினம் மாவட்டம், திருக்குவளை தாலுகாவுக்குட்பட்ட மீனம்பநல்லூரைச் சேர்ந்தவர் புவனேஷ்வரி (30). இவர் கடந்த 18-ம் தேதி தன்னுடைய வீட்டில் உள்ள பரணியிலிருந்து பொருட்களை எடுத்து கீழே இறக்கி வைத்துக்கொண்டிருந்தார். அப்போது தடுமாறி கீழே விழுந்ததில், தரையில் கிடந்த ஊசி ஒன்று புவனேஷ்வரி நெஞ்சில் குத்தியது. வலியால் துடித்த அவர், அதற்கான முறையான மருத்துவ சிகிச்சைப் பெறாததால், 2 நாட்கள் கழித்து அவருக்கு மூச்சுத்திணறல் மற்றும் நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.