
விஜயகாந்த் பெயரை மதுரை மாநாட்டில் விஜய் குறிப்பிட்டது முதலே அரசியல் களத்தில் பல்வேறு யூகங்கள் முளைக்க தொடங்கின. விஜயகாந்த் மீதான விஜய்யின் திடீர் பாசம் குறித்த கேள்விகளும் எழ ஆரம்பித்துள்ளது. இதே கேள்வியை பிரேமலதாவும் வலுவாக எழுப்பியுள்ளார்.
சமீபத்தில் நடந்த மதுரை தவெக மாநாட்டில் பேசிய விஜய், “நான் இந்த மண்ணில் கால் எடுத்து வைத்ததும் ஒருத்தரை பற்றிதான் மனதில் ஓடிக்கொண்டே இருந்தது. சினிமா என்றாலும் அரசியல் என்றாலும் எனக்கு ரொம்ப பிடிச்சது எம்ஜிஆர் தான். அவரோடு பழகுவதற்கு எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால், அவர் மாதிரியே குணம் கொண்ட என் அண்ணன் புரட்சிக் கலைஞர் கேப்டன் விஜயகாந்த் அவர்களோடு பழகுவதற்கு நிறையவே வாய்ப்பு கிடைத்தது. அவரும் இந்த மதுரை மண்ணைச் சேர்ந்தவர் தானே அவரை மறக்க முடியுமா” என்று கூறினார்.