• August 25, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: தமிழகத்தில் நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் ஆகஸ்ட் 27, 28 தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஒடிசா – மேற்கு வங்காள கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில், நாளை ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும். இதன் காரணமாக தமிழகத்தில் நாளை (ஆகஸ்ட் 26) முதல் ஆகஸ்ட் 30ம் தேதி வரை ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை முதல் ஆகஸ்ட் 28ம் தேதி வரை ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 30 முதல் 40 கி.மீ வேகத்தில் வீசக்கூடும்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *