
சென்னை: ‘அரசுப் பள்ளிகளில் மாணவிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது’ என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கோவை கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர்கள் குடித்துவிட்டு வருவதோடு, பாலியல் ரீதியாக அத்துமீறுவதாக மாணவிகள் குற்றம்சாட்டி காணொளி வெளியிட்டிருப்பது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.