
லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலம் புலந்த்ஷஹர் மாவட்டத்தில் பக்தர்களை ஏற்றிச் சென்ற டிராக்டர் மீது இன்று அதிகாலை லாரி மோதியதில் 9 பேர் உயிரிழந்தனர், 43 பேர் காயமடைந்தனர்.
புலந்த்ஷஹர் மாவட்டத்தில் இன்று அதிகாலை 2.10 மணியளவில் ஆர்னியா பைபாஸ் அருகே புலந்த்ஷஹர்-அலிகார் எல்லையில், லாரி ஒன்று டிராக்டர் மீது பின்னால் இருந்து மோதியதால், டிராக்டர் கவிழ்ந்தது.