
கர்நாடக மாநிலம் தட்சிண கன்னட மாவட்டம் தர்மஸ்தலாவில் உள்ள மஞ்சுநாதா கோயிலில் ஏராளமான பெண்களும் சிறுமிகளும் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொல்லப்பட்டதாக எழுந்த புகார்கள், நாட்டையே அதிரவைத்த நிலையில், இந்தப் பாலியல் வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
1995 முதல் 2014 வரை தர்மஸ்தலா மஞ்சுநாதா கோயிலிலில் தூய்மைப் பணியாளராக வேலைபார்த்த ஒருவர், 50-க்கும் மேற்பட்ட பெண்கள், சிறுமிகளின் சடலங்களைப் புதைத்ததாக பகிரங்கமாகக் கூறியது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஜூன் 22-ல் அவர் அந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தார். அது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என ஜூன் 27-ல் வழக்கறிஞர்கள் வலியுறுத்திய பின்னர், ஜூலை 3-ல் அது தொடர்பாக, முறையாக அவர் அளித்த புகாரைத் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.