
இணையத்தில் எழுந்த கிண்டல்களுக்கு தனது பேச்சில் பதிலடி கொடுத்துள்ளார் சிவகார்த்திகேயன்.
சமீபமாக இணையத்தில் பெரும் கிண்டலுக்கு ஆளாகி வந்தார் சிவகார்த்திகேயன். ஏனென்றால் சிறிய படங்களில் எந்தவொரு படம் நன்றாக இருந்தாலும், அப்படக்குழுவினரை அழைத்து பாராட்டி வந்தார். இதுவே நாளடைவில் இணையத்தில் கிண்டலாக மாறியது. ‘கூலி’ வெளியான அன்று கூட பலரும் சிவகார்த்திகேயன், ரஜினியை அழைத்து பாராட்டினார் என்று இணையத்தில் பரப்பினார்கள்.