
சென்னை: செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு, பணிக்கு செல்லும் போது அரசு பேருந்து மோதி உயிரிழந்த அரசு மருத்துவர் குடும்பத்துக்கு நிவாரணத் தொகையாக, ரூ.1 கோடி வழங்க வேண்டும் என, தமிழக முதல்வருக்கு, அரசு மருத்துவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணிபுரிந்து வந்தவர், பச்சிளம் குழந்தை சிறப்பு மருத்துவர் மணிக்குமார். கடந்த 18-ம்தேதி சாலை விபத்தில் உயிரிழந்தார். அவருடன் சென்ற மற்றொரு மருத்துவர் படுகாயம் அடைந்தார்.