• August 25, 2025
  • NewsEditor
  • 0

இந்தியாவின் பெரும்பான்மை நிலப்பரப்பை தன்னுடைய கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வந்த மன்னர், சந்திரகுப்தர் மவுரியர். இந்தியாவின் முதல் பேரரசர் என்று கணிக்கப்படும் இவர் உருவாக்கிய மவுரிய பேரரசு, பல்வேறு பகுதிகளைத் தங்கள் ஆளுகைக்குள் அடக்கி இருந்தது. சந்திரகுப்தர், அவ்வாறு போரில் வென்றதற்கு, அவருடைய ராஜகுரு, அர்த்தசாஸ்திரம் எழுதிய சாணக்கியரே காரணம் என்பார்கள். இவர்கள் இருவரையும் மையப்படுத்தி உருவான திரைப்படம், ‘சந்திரகுப்த சாணக்கியர்’.

இந்​தப் படத்​தைக் கோவையைச் சேர்ந்த சி.கே.சச்சி இயக்​கி​னார். எழுத்​தாளர் ஆர்​.கே.​நா​ராயணனின் உறவின​ரான இவருடைய இயற்​பெயர் சி.கே.சதாசிவம். அந்த காலத்​திலேயே சட்​டம் படித்​திருந்த இவர், சினிமா ஆர்​வத்​தால், லண்​டனில் திரைப்பட இயக்​கம் குறித்து கற்​று​விட்​டு, எல்​லீஸ்ஆர்​.டங்​க​னின் ‘சதிலீலா​வ​தி’​யில் பணிபுரிந்​தார். பின்​னர் அவர் இயக்​கிய படம், ‘சந்​திரகுப்த சாணக்​கியர்’.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *