
சென்னை: மழைநீர் வடிகால் பணிக்காக மண்தோண்டப்பட்ட இடங்களில் தடுப்புகள் அமைக்க வேண்டும் என ஒப்பந்ததாரர்களுக்கு மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கை: சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், மழைநீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப்படும் இடங்களில், பொதுமக்களின்பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் மண் தோண்டப்பட்ட இடங்களில் மக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறின்றி முறையான தடுப்புகள் அமைத்து பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று மாநகராட்சியின் அனைத்து ஒப்பந்ததாரர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.