• August 25, 2025
  • NewsEditor
  • 0

திருச்சி: ​முதல்​வர் ஸ்டா​லினுக்கு எப்​போதும் குடும்ப சிந்​தனை​தான். வாக்​களித்த மக்​கள் மீது அவருக்கு அக்​கறை கிடை​யாது என்று அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி கூறி​னார். ‘மக்​களை காப்​போம் தமிழகத்தை மீட்​போம்’ என்ற பிரச்​சார சுற்றுப்பயணம் மேற்​கொண்டு வரும் பழனி​சாமி, திருச்சி மாவட்​டம் மண்​ணச்​சநல்​லூர் சட்​டப்​பேர​வைத் தொகு​தி​யில் நேற்று பொது​மக்​களிடையே பேசி​ய​தாவது: அதி​முக ஆட்​சி​யில் வறட்​சி​யின்​போது விவ​சா​யிகளுக்கு ரூ.2,400 கோடி நிவாரணம் வழங்கினோம். இந்​தி​யா​விலேயே அதிக உணவு தானிய உற்​பத்​தியை பெருக்​கி, தமிழகம் முதலிடம் வகித்​ததற்கு அதி​முக ஆட்சியின் நிர்​வாகத் திறமையே காரணம்.

திமுக எம்​எல்ஏ மருத்​து​வ​மனை​யில் கிட்னி அறுவை சிகிச்​சை​யில் முறை​கேடு நடந்​த​தாக ஐஏஎஸ் அதி​காரி தலை​மையி​லான மருத்​து​வக் குழு​வினர் கண்​டறிந்​து, அந்த மருத்​து​வ​மனைக்கு உடல் உறுப்பு அறுவை சிகிச்​சைக்​கான அனு​ம​தியை ரத்து செய்தனர். ஆனால், பின்​னர் எந்த நடவடிக்​கை​யும் எடுக்​க​வில்​லை. உடல் உறுப்பு திருட்டு தொடர்​பாக அடுத்து அமை​யும் அதி​முக ஆட்​சி​யில் தக்க நடவடிக்கை எடுக்​கப்​படும்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *