
திருச்சி: முதல்வர் ஸ்டாலினுக்கு எப்போதும் குடும்ப சிந்தனைதான். வாக்களித்த மக்கள் மீது அவருக்கு அக்கறை கிடையாது என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கூறினார். ‘மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்’ என்ற பிரச்சார சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் பழனிசாமி, திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் சட்டப்பேரவைத் தொகுதியில் நேற்று பொதுமக்களிடையே பேசியதாவது: அதிமுக ஆட்சியில் வறட்சியின்போது விவசாயிகளுக்கு ரூ.2,400 கோடி நிவாரணம் வழங்கினோம். இந்தியாவிலேயே அதிக உணவு தானிய உற்பத்தியை பெருக்கி, தமிழகம் முதலிடம் வகித்ததற்கு அதிமுக ஆட்சியின் நிர்வாகத் திறமையே காரணம்.
திமுக எம்எல்ஏ மருத்துவமனையில் கிட்னி அறுவை சிகிச்சையில் முறைகேடு நடந்ததாக ஐஏஎஸ் அதிகாரி தலைமையிலான மருத்துவக் குழுவினர் கண்டறிந்து, அந்த மருத்துவமனைக்கு உடல் உறுப்பு அறுவை சிகிச்சைக்கான அனுமதியை ரத்து செய்தனர். ஆனால், பின்னர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. உடல் உறுப்பு திருட்டு தொடர்பாக அடுத்து அமையும் அதிமுக ஆட்சியில் தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.