
மதுரை: அரசு ஊழியர் மீதான வழக்கு நிலுவையில் இருக்கும்போது, அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கையை தொடரலாம் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதுக்கோட்டையில் உதவி தொடக்கக் கல்வி அலுவலராகப் பணிபுரிந்தவர் பொன்னழகு. இவர் லஞ்ச ஒழிப்பு வழக்கில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அதை ரத்து செய்து, ஓய்வுபெற அனுமதித்து, அனைத்து பணப் பலன்களையும் வழங்க உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார்.
இதை விசாரித்த தனி நீதிபதி, “லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி, மனுதாரர் மீதான வழக்கின் விசாரணையை 4 மாதத்தில் முடித்து, நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்ய வேண்டும். விசாரணையில் மனுதாரர் விடுவிக்கப்பட்டால், பணியிடை நீக்கத்தை ரத்து செய்து ஓய்வூதியப் பலன்களை வழங்க வேண்டும்” என உத்தரவிட்டார்.