• August 25, 2025
  • NewsEditor
  • 0

மதுரை: அரசு ஊழியர் மீதான வழக்கு நிலு​வை​யில் இருக்​கும்​போது, அவர்​கள் மீது துறை ரீதி​யான நடவடிக்​கையை தொடரலாம் என உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது. புதுக்​கோட்​டை​யில் உதவி தொடக்​கக் கல்வி அலு​வல​ராகப் பணிபுரிந்​தவர் பொன்​னழகு. இவர் லஞ்ச ஒழிப்பு வழக்​கில் பணி​யிடை நீக்​கம் செய்​யப்​பட்​டார். அதை ரத்து செய்​து, ஓய்​வு​பெற அனு​ம​தித்​து, அனைத்து பணப் பலன்​களை​யும் வழங்க உத்​தர​விடக் கோரி உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் மனு தாக்​கல் செய்​தார்.

இதை விசா​ரித்த தனி நீதிப​தி, “லஞ்ச ஒழிப்பு டிஎஸ்​பி, மனு​தா​ரர் மீதான வழக்​கின் விசா​ரணையை 4 மாதத்​தில் முடித்​து, நீதி​மன்றத்​தில் குற்​றப்​பத்​திரி​கை​யைத் தாக்​கல் செய்ய வேண்​டும். விசா​ரணை​யில் மனு​தா​ரர் விடுவிக்​கப்​பட்​டால், பணி​யிடை நீக்கத்தை ரத்து செய்து ஓய்​வூ​தி​யப் பலன்​களை வழங்க வேண்​டும்” என உத்​தர​விட்​டார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *