
தூத்துக்குடி: முன்னாள் குடியரசு துணைத் தலைவர் தன்கரை பதவி விலக வைத்து, வீட்டுக் காவலில் முடக்கி வைத்திருப்பது ஏன் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பினார்.
தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: குடியரசு துணைத் தலைவர் தேர்தலை பாஜக அரசு திணித்துள்ளது. ஏற்கெனவே குடியரசு துணைத் தலைவராக இருந்த தன்கரை பதவி விலகவைத்து, வீட்டுக் காவலில் முடக்கி வைத்துள்ளனர். குடியரசு துணைத் தலைவருக்கே இந்த நிலை என்றால், குடிமக்களுக்கு என்ன நிலை என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும்.