
புதுடெல்லி: கடற்படை பயன்பாட்டுக்காக ஜெர்மனி நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து இந்தியாவில் 6 நவீன நீர்மூழ்கி கப்பல்கள் தயாரிக்கும் திட்டம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இந்திய கடற்படை அடுத்த 10 ஆண்டுகளில், தன்னிடம் உள்ள 10 பழைய நீர்மூழ்கி கப்பல்களை மாற்ற திட்டமிட்டுள்ளது. எல் அண்ட் டி போன்ற தனியார் நிறுவனங்களுடன் இணைந்து நீர்மூழ்கி கப்பல் தயாரிக்கும் திட்டத்திலும் இந்தியா ஈடுபட்டுள்ளது. சீனாவும், பாகிஸ்தானும் தனது கடற்படையை விரைவாக விரிவுபடுத்தி வருவதால், இந்தியாவும் தனது கடற்படையை நவீனப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.