• August 25, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: தமிழகத்​தில் ஏஐ வளர்ச்​சியை மேம்​படுத்த, 35 அரசுத் துறை​கள், 38 புத்​தொழில் நிறு​வனங்​களில் தமிழ்​நாடு செயற்கை நுண்​ணறிவு இயக்​கம் மூலம் பயிலரங்​கு​கள் நடத்​தப்​பட்​டுள்​ள​தாக தகவல் தொழில்​நுட்​பத் துறை அமைச்​சர் பழனிவேல் தியாக​ராஜன் தெரி​வித்​துள்​ளார்.

இதுதொடர்​பாக அவர் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறி​யுள்​ள​தாவது: தமிழக தகவல் தொழில்​நுட்​பத் துறை​யின்​கீழ் இயங்கி வரும் ஐடிஎன்டி மையம், ஐசிடி அகாட​மி, எல்​காட் நிறு​வனம் ஆகிய​வற்​றுடன் இணைந்து செயற்கை நுண்​ணறிவு (ஏஐ) சார்ந்த புது​மை​களு​டன் ஆட்சி நிர்​வாகத்தை மேம்​படுத்த ரூ.13.93 கோடி​யில் தமிழ்​நாடு செயற்கை நுண்​ணறிவு இயக்​கம் கடந்த 2024-ல் தொடங்​கப்​பட்​டது. ஏஐ மூலம் சமூக சவால்​களை எதிர்​கொண்​டு, மக்​களுக்கு வழங்​கும் சேவை​களை மேம்​படுத்த இந்த இயக்​கம் ஏற்​படுத்​தப்​பட்​டது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *