
சென்னை: யாரைக் காப்பாற்ற 130-வது சட்டத்திருத்த மசோதாவை கருப்பு மசோதா என முதல்வர் ஸ்டாலின் கூறுகிறார்? என்ற அமித் ஷாவின் கேள்விக்கு முதல்வர் ஸ்டாலின் பதிலளிக்க வேண்டும் என தமிழக பாஜக வலியுறுத்தி உள்ளது.
இதுகுறித்து பாஜக மாநில செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நெல்லை பூத் கமிட்டி மாநாட்டில் அமித் ஷா, தமிழகத்தில் ஊழல் ஆட்சியை ஒழிப்பேன் என்றவுடன் மக்கள் விரோத அரசியல் சகுனிகளின் அலறல் சத்தங்களும், ஊழல் அமைச்சர்களின் உளறல் பேச்சுகளும் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது.