
புதுடெல்லி: இஸ்ரோவின் முதல் விண்வெளி பயணமான ககன்யானில் செல்ல உள்ள விண்வெளி வீரர்கள் பாதுகாப்பாக தரையிறங்குவதை உறுதிப்படுத்தும் முதல் ஒருங்கிணைந்த ஏர் டிராப் சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக இஸ்ரோ வெளியிட்டுள்ள பதிவில், "ககன்யான் பயணத்தின் தொடக்கம் முதல் முடிவு வரையிலான முழுமையான ஒருங்கிணைந்த ஏர் டிராப் சோதனை வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இஸ்ரோ, இந்திய விமானப்படை, டிஆர்டிஓ, இந்திய கடற்படை, இந்திய கடலோர காவல்படை ஆகியவற்றின் கூட்டு முயற்சியின் கீழ் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.