
புதுடெல்லி: வாக்காளராக பதிய ஆதார் மட்டுமே போதுமானது அல்ல என்று தெரிவித்துள்ள பாஜக, உச்ச நீதிமன்றம் இதை உறுதிப்படுத்தி இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளது.
பிஹாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் அதற்கு எதிராக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அம்மாநிலத்தில் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். சிறப்பு தீவிர திருத்தத்தில் 65 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ள நிலையில், தகுதி வாய்ந்த வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாகவும் இதன்மூலம் வாக்கு திருட்டு நடப்பதாகவும் ராகுல் காந்தி குற்றம் சாட்டி வருகிறார்.