
புதுடெல்லி: சபாநாயகர் பதவியின் கண்ணியத்தை அதிகரிக்க சபாநாயகர்கள் பாடுபட வேண்டும் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா வலியுறுத்தியுள்ளார்.
அகில இந்திய சபாநாயகர்கள் மாநாடு புதுடெல்லியில் இன்று தொடங்கியது. இந்த இரண்டு நாள் மாநாட்டை உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடங்கிவைத்தார். விழாவில், அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச சபாநாயகர்கள், மேல்சபை தலைவர்கள் மற்றும் துணைத் தலைவர்கள் கலந்து கொண்டனர். மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, டெல்லி துணைநிலை ஆளுநர் வி.கே. சக்சேனா, டெல்லி முதல்வர் ரேகா குப்தா உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.