
நொய்டா: நொய்டாவில் வரதட்சணைக் கொடுமையால் இளம் பெண் ஒருவர் தீ வைத்து எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், போலீஸ் காவலில் இருந்து தப்பிக்க முயன்ற அப்பெண்ணின் கணவர் விபின் பாட்டி காலில் சுட்டு பிடிக்கப்பட்டார்.
உத்தரப்பிரதேசம், நொய்டாவில் ரூ.36 லட்சம் வரதட்சணைக்காக கணவன் வீட்டார் பெண்ணைத் தீவைத்து எரித்துக் கொலை செய்துள்ளனர். அப்பெண்ணின் இளம் வயது மகன் கண் முன்பாக இந்தக் கொடூர சம்பவம் நடந்துள்ளது. உயிரிழந்த இளம் பெண் நிக்கியின் தந்தை அளித்தப் பேட்டியில், “என் மகளுக்கு நீதி கிடைக்க வேண்டும். உ,பி. அரசு குற்றவாளிகள் அனைவரையும் என்கவுன்ட்டர் செய்ய வேண்டும், விபினின் வீட்டை புல்டோசர் விட்டு தரைமட்டமாக்க வேண்டும். இது யோகி அரசு. இந்த அரசு என் மகளுக்கு நீதி செய்யும் என்று நம்புகிறேன்.” என்றார்.