
தமிழகத்தில் நேற்று கட்சியை தொடங்கியவர்கள் கூட தொழிலாளர்கள் குறித்து எதையும் பேசவில்லை, என சிஐடியு மாநில தலைவர் சவுந்தர ராஜன் தெரிவித்தார்.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கத்தினர் சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே, அரசு போக்குவரத்துக் கழக மெய்யனூர் பணிமனை எதிரே 6-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில், போக்குவரத்து சங்கத்தின் மண்டல செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, தலைவர் செம்பன், பொருளாளர் சேகர், சிஐடியு ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிற்சங்க ஒருங்கிணைப்பாளர் கலைச்செல்வன் உள்பட பலர் பங்கேற்றனர்.