
புதுடெல்லி: கடந்த 2023-ம் ஆண்டு நாடாளுமன்றத்துக்குள் புகுந்த 2 மர்ம நபர்கள் மஞ்சள் நிற புகையை எழுப்பி, எம்.பி.க்கள் இடையே பீதியை ஏற்படுத்தினர். அதன்பின் நாடாளுமன்ற வளாகத்தின் பாதுகாப்பு, மத்திய தொழில் பாதுகாப்பு படையினரிடம் (சிஐஎஸ்எப்) ஒப்படைக்கப்பட்டது.
இந்நிலையில், கடந்த 22-ம் தேதி ஒருவர் நாடாளுமன்ற வளாகத்தின் உயரமான சுற்றுச்சுவர் மீது ஏற முயன்றார். அவரை சிஐஎஸ்எப் வீரர்கள் பிடித்து டெல்லி போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.