
பாட்னா: லஞ்சம் வாங்கி ரூ.100 கோடிக்கு மேல் சொத்து குவித்த பிஹார் இன்ஜினீயர் வீட்டில் சோதனை நடத்த வந்த பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள், ரூ.3 கோடி பணத்தை எரித்து அழித்ததை கண்டு திடுக்கிட்டனர்.
பிஹார் மாநிலத்தில் ஊரக பணிகள் துறையில் இன்ஜினீயராக பணியாற்றுபவர் வினோத் ராய். மதுபானி, சீதா மார்ஹி ஆகிய இரு மாவட்டங்களில் நடைபெறும் சாலைகள் மற்றும் பாலங்கள் கட்டுமானத்தை இவர்தான் கவனித்து வந்தார். ஒப்பந்தகாரர்களிடம் இருந்து அதிகளவில் லஞ்சம் வாங்குவதை இவர் வழக்கமாக கொண்டுள்ளார். இது குறித்து பொருளாதார குற்றப்பிரிவுக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் வீட்டில் சோதனை செய்ய பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் முடிவு செய்தனர்.