• August 24, 2025
  • NewsEditor
  • 0

ஷாஜகான்பூர்: பிரதமர் நரேந்​திர மோடி பல்​வேறு வளர்ச்​சித் திட்​டங்​களை தொடங்கி வைக்க நேற்று முன்​தினம் பிஹார் வந்​தார். முன்​ன​தாக ஆர்​ஜேடி சமூக ஊடக தளத்​தில், “இன்று பிஹாரின் கயா​வுக்கு வாக்​குத் திருடன் வரு​கிறார். பிஹாரி​களுக்கு முன்​னால் பொய்​களை சொல்​வார்’’ என்று கூறப்​பட்டு இருந்​த​தாக உ.பி.​யின் ஷாஜ​கான்​பூர் காவல் நிலை​யில் நகர பாஜக தலை​வர் ஷில்பி குப்தா புகார் அளித்​தார்.

அவர் தனது புகாரில், “பிரதமருக்கு எதி​ரான தேஜஸ்​வி​யின் அவதூறான கருத்து நாட்டு மக்​களிடையே பெரும் கோபத்தை ஏற்​படுத்​தி​யுள்​ளது” என்​றும் கூறி​யிருந்​தார். இது தொடர்​பாக நகரின் சதார் பஜார் காவல் நிலை​யத்​தில் பிஎன்​எஸ் சட்​டத்​தின் 353(2) பிரிவு (வதந்​தி​களை பரப்​புதல்), 197(1)ஏ பிரிவு (படம் மூலம் குற்​றம் சுமத்​துதல்) ஆகிய​வற்​றின் கீழ் வழக்​குப் பதிவு செய்​யப்​பட்​டுள்​ள​தாக மாவட்ட காவல் கண்​காணிப்​பளர் ராஜேஷ் துவிவேதி நேற்று தெரி​வித்​தார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *