• August 24, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: சட்​ட​விரோத ஆன்​லைன் மற்​றும் ஆஃப்​லைன் சூதாட்ட வழக்​கில் கர்​நாடக காங்​கிரஸ் எம்​எல்ஏ கே.சி.வீரேந்​திரா நேற்று சிக்​கிம் மாநிலத்​தில் கைது செய்​யப்​பட்​டார். இது தொடர்​பான சோதனை​யில் ரூ.12 கோடி ரொக்​கம், ரூ.6 கோடி தங்​கம் உள்​ளிட்​ட​வற்றை அமலாக்​கத் துறை கைப்​பற்​றி​யுள்​ளது.

கர்​நாட மாநிலத்​தின் சித்​ரதுர்கா தொகுதி காங்​கிரஸ் எம்​எல்ஏ வீரேந்​திரா (50). இவர் மற்​றும் இவரது சகோ​தரர் உள்​ளிட்ட குடும்​பத்​தினருக்கு சொந்​த​மான 30 இடங்​களில் அமலாக்​கத் துறை நேற்று முன்​தினம் சோதனை நடத்​தி​யது. பல்​வேறு மாநிலங்​களில் நடை​பெற்ற இந்த சோதனை​யில் வெளி​நாட்டு கரன்சி உட்பட ரூ.12 கோடி ரொக்​கம், ரூ.6 கோடி மதிப்​புடைய தங்க நகைகள, 10 கிலோ வெள்​ளிப் பொருட்​கள் மற்​றும் 4 வாக​னங்​களை அமலாக்​கத் துறை கைப்​பற்​றியது. மேலும் 17 வங்​கிக் கணக்​கு​கள் மற்​றும் 2 வங்கி லாக்​கர்​களை முடக்​கியது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *