
சென்னை: தமிழகத்தில் அனைத்து மாணவர்களும் சமத்துவமான கல்வி பெறுவதை மாநிலக் கல்விக் கொள்கை- 2025 மேம்படுத்தும் என்று அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.
தேசியக் கல்விக் கொள்கைக்கு மாற்றாக தமிழகத்துக்கென பிரத்யேக மாநிலக் கல்விக் கொள்கை-2025 வடிவமைக்கப்பட்டு தமிழக அரசால் வெளியிடப்பட்டுள்ளது. இதுதொடர்பான சந்தேகங்கள், கேள்விகளை ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸிடம் கேட்டிருந்தனர். அதற்கு அவர் அளித்த பதில்கள்: