
சென்னை: அமித் ஷா 1000 முறை வந்தாலும் தமிழகத்தில் பாஜகவால் காலூன்ற முடியாது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: நெல்லையில் நேற்று முன்தினம் பாஜக கூட்டத்தில் உரையாற்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக அரசை அகற்றுவோம் என்றும், அதிமுக-பாஜக கூட்டணி ஆட்சி அமைக்கும் என்றும் அதிகார மமதையுடன் பேசியிருக்கிறார்.