• August 24, 2025
  • NewsEditor
  • 0

மேட்​டூர் / தரு​மபுரி: மேட்​டூர் அணைக்​கான நீர்​வரத்து குறைந்​துள்ள நிலை​யில், 16 கண் மதகு​கள் வழி​யாக உபரிநீர் வெளி​யேற்​றப்​படு​வது நிறுத்​தப்​பட்​டுள்​ளது. மேலும், காவிரி டெல்டா பாசனத்​துக்கு தண்​ணீர் திறப்பு விநாடிக்கு 10,000 கனஅடி​யாக குறைக்​கப்​பட்​டுள்​ளது.

மேட்​டூர் அணைக்கு நேற்று முன்​தினம் இரவு விநாடிக்கு 19,850 கனஅடி​யாக இருந்த நீர்​வரத்து நேற்று மாலை 10,850 கனஅடி​யாக குறைந்​தது. நீர்​வரத்து சரிந்த நிலை​யில் அணை​யின் 16 கண் மதகு​கள் வழி​யாக உபரிநீர் வெளி​யேற்​றப்​படு​வது நேற்று காலை 10 மணி முதல் நிறுத்​தப்​பட்​டது. கடந்த 6 நாட்​களுக்கு பிறகு உபரிநீர் வெளி​யேற்​றப்​படு​வது தற்​போது நிறுத்​தப்​பட்​டுள்​ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *