
சென்னை: எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு நிர்வாக, சட்ட ரீதியாக எண்ணற்ற குறுக்கீடுகள், தடைகளை ஏற்படுத்தி மத்திய பாஜக அரசு தொடர்ந்து தொல்லை கொடுத்து வருகிறது. மாநிலங்களுக்கு உரிய நியாயமான நிதி பங்கீட்டை வழங்க மறுக்கிறது என்று முதல்வர் ஸ்டாலி்ன் குற்றம் சாட்டியுள்ளார்.
மத்திய – மாநில உறவுகள் குறித்த தேசிய கருத்தரங்கம் சென்னையில் நேற்று நடைபெற்றது. தலைமைச் செயலர் முருகானந்தம் வரவேற்றார். மாநில உரிமைகளை பாதுகாத்து, மத்திய – மாநில அரசுகள் இடையிலான உறவை மேம்படுத்தும் நோக்கில் தமிழக அரசு அமைத்துள்ள உயர்நிலைக் குழுவின் தலைவரும், உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதியுமான குரியன் ஜோசப் இக்கருத்தரங்கின் நோக்கம் குறித்து பேசினார். உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஜஸ்டி செலமேஸ்வரும் பேசினார்.