
சென்னை: ஆண்டுக்கு 6 சதவீதம் சொத்து வரி உயர்வுக்கு வழிவகுக்கும் அரசாணையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையை சேர்ந்த ஹரீஷ் சவுத்திரி என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: மாநகராட்சி விதிகளின்படி 5 ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் சொத்துவரியை உயர்த்த வேண்டும். ஆனால், தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் விதி 264 (2)-ல் 2023-ம் ஆண்டு திருத்தம் செய்து, தமிழகம் முழுவதும் சொத்துவரி ஆண்டுக்கு 6 சதவீதம் தானாக உயர்த்தப்படும் என்று 2024-ம் ஆண்டு செப்.5-ம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு வரியை உயர்த்தி நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை பிறப்பித்துள்ள அரசாணை சட்டவிரோதமானது.