• August 24, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: ஆண்​டுக்கு 6 சதவீதம் சொத்து வரி உயர்​வுக்கு வழி​வகுக்​கும் அரசாணையை எதிர்த்து தாக்​கல் செய்​யப்​பட்ட மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

சென்​னையை சேர்ந்த ஹரீஷ் சவுத்​திரி என்​பவர் உயர் நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்​துள்ள மனு​வில் கூறி​யிருப்​ப​தாவது: மாநக​ராட்சி விதி​களின்​படி 5 ஆண்​டு​களுக்கு ஒரு​முறை​தான் சொத்​து​வரியை உயர்த்த வேண்​டும். ஆனால், தமிழ்​நாடு நகர்ப்​புற உள்​ளாட்சி அமைப்​பு​கள் விதி 264 (2)-ல் 2023-ம் ஆண்டு திருத்​தம் செய்​து, தமிழகம் முழு​வதும் சொத்​து​வரி ஆண்​டுக்கு 6 சதவீதம் தானாக உயர்த்​தப்​படும் என்று 2024-ம் ஆண்டு செப்​.5-ம் தேதி அரசாணை பிறப்​பிக்​கப்​பட்​டுள்​ளது. இவ்​வாறு வரியை உயர்த்தி நகராட்சி நிர்​வாகம் மற்​றும் குடிநீர் வழங்​கல் துறை பிறப்​பித்​துள்ள அரசாணை சட்​ட​விரோத​மானது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *