• August 24, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: இண்​டியா கூட்​ட​ணி​யின் குடியரசு துணைத் தலை​வர் வேட்​பாளர் சுதர்​சன் ரெட்​டி, நாளை சென்னை வந்து முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் மற்​றும் கூட்​ட​ணிக் கட்​சிகளின் தலை​வர்​களை சந்​தித்து ஆதரவு கோரு​கிறார். குடியரசுத் துணைத் தலை​வ​ராக​வும் மாநிலங்​கள​வைத் தலை​வ​ராக​வும் இருந்த ஜெகதீப் தன்​கர் ஜூலை 21-ம் தேதி உடல்​நிலையை காரணம் காட்டி திடீரென ராஜி​னாமா செய்​தார். இதையடுத்​து, புதிய குடியரசு துணைத் தலை​வரை தேர்வு செய்​வதற்​கான நடவடிக்​கையை உடனே தேர்​தல் ஆணை​யம் தொடங்​கியது.

செப்​.9-ம் தேதி தேர்​தல் நடை​பெறும் என்று அறிவிக்​கப்​பட்​டது. குடியரசுத் துணைத் தலை​வரை மக்​களவை, மாநிலங்​களவை எம்​.பி.க்​கள் இணைந்து தேர்வு செய்​வார்​கள். மக்​களவை​யில் தற்​போது 542 எம்​பிக்​கள் உள்​ளனர். ஒரு இடம் காலி​யாக உள்​ளது. அதே​போல் மாநிலங்​களவை​யில் 239 எம்​பிக்​கள் உள்​ளனர். 6 இடங்​கள் காலி​யாக உள்​ளன. இந்​நிலை​யில், பாஜக தலை​மையி​லான தேசிய ஜனநாயக கூட்​ட​ணி​யின் வேட்​பாள​ராக, மகா​ராஷ்டிர மாநில ஆளுந​ரான சி.பி.​ரா​தாகிருஷ்ணன் அறிவிக்​கப்​பட்​டார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *