
சென்னை: மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தையே அமல்படுத்த வேண்டும் என்று 2-வது நாள் கருத்துகேட்பு கூட்டத்தில் 17 அரசு ஊழியர்- ஆசிரியர் சங்கங்கள் ககன்தீப்சிங் பேடி தலைமையிலான குழுவிடம் மனு அளித்தனர். பழைய ஓய்வூதியத் திட்டம், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம், ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் (யுபிஎஸ்) ஆகிய 3 விதமான ஓய்வூதிய திட்டங்கள் குறித்து ஆய்வு செய்ய மூத்த ஐஏஎஸ் அதிகாரி ககன்தீப்சிங் பேடி தலைமையில் தமிழக அரசு ஒரு குழுவை அமைத்துள்ளது.
அந்த குழு தனது அறிக்கையை செப்.30-ம் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு அரசு உத்தரவிட்டுள்ளது. இதைத்தொடர்ந்து இக்குழு அரசு ஊழியர்- ஆசிரியர் சங்கங்களின் நிர்வாகிகளின் கருத்துகளை கேட்டறிந்து வருகிறது. அந்தவகையில் முதலாவது கருத்து கேட்பு கூட்டம் ஆக.18-ம்