
பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே மின்னல் பாய்ந்து சகோதரிகளான பள்ளிச் சிறுமிகள் 2 பேர் உயிரிழந்தனர்.
பரமக்குடி வட்டம் சத்திரக்குடி அருகே வாழவந்தாள்புரம் கிராமத்தைச் சேர்ந்த நூருல் அமீனின் மகள்கள் செய்யது அஸ்பியா பானு (13), சபிக்கா பானு (9). சத்திரக்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் செய்யது அஸ்பியா பானு 9-ம் வகுப்பும், அரியகுடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சபிக்கா பானு 5-ம் வகுப்பும் படித்து வந்தனர்.