
சென்னை: மாமியாரை அடித்தது தொடர்பான புகாரில் மருமகளை காவல் நிலையத்தில் தாக்கி மனித உரிமை மீறலில் ஈடுபட்டதாக, உதவி ஆய்வாளருக்கு 2 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து, மாநில மனித உரிமை ஆணையம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மும்பையில் கணவர் மற்றும் இரு மகள்களுடன் வசித்து வந்த அமுதா என்பவர், கடந்த 2020-ஆம் ஆண்டு விடுமுறைக்காக திருநெல்வேலி மாவட்டம், பத்தமடையில் உள்ள தனது மாமனார் வீட்டுக்கு குழந்தைகளுடன் வந்துள்ளார். அப்போது சொத்து பிரச்சினை தொடர்பாக, அவருக்கும், மாமியார் சுப்புலட்சுமிக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.