
சென்னை: சென்னை, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களில் ரூ.10.89 கோடி மதிப்பீட்டில் நடைபெறவுள்ள விளையாட்டு மேம்பாட்டு உட்கட்டமைப்பு பணிகளுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று அடிக்கல் நாட்டினார்.
சென்னை கோபாலபுரத்தில் அமைந்துள்ள கலைஞர் நூற்றாண்டு குத்துச்சண்டை அகாடமி வளாகத்தில் புதிய விளையாட்டு விடுதி, கோவை மாவட்டத்தில் உள்ள நேரு விளையாட்டு வளாகத்தில் பார்வையாளர்கள் மாடம் புதுப்பிக்கப்படும் என நடப்பாண்டு (2025-26) பட்ஜெட் கூட்டத் தொடரில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்திருந்தார்.