
தமிழகமே வியக்கும் வகையில் மதுரையில் தவெகவின் 2-வது மாநில மாநாட்டை நடத்திக் காட்டியிருக்கிறார் விஜய். இந்த மாநாட்டில் விஜய்யின் பேச்சு பல்வேறு அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது. தவெகவின் இந்த மாநாடு மீதான எதிர்பார்ப்பு, அது ஏற்படுத்திய தாக்கம் குறித்து பார்ப்போம்…
மதுரையில் 2-வது மாநில மாநாடு என விஜய் அறிவித்த உடனே எதிர்பார்ப்பு பற்றிக்கொண்டது. ஏனென்றால், முதல் மாநில மாநாட்டை வட தமிழகமான விக்கிரவாண்டியில் வெற்றிகரமாக நடத்தியது தவெக. அதேபோல தென்பகுதியான மதுரையில் பிரம்மாண்டம் காட்ட முடியுமா என்ற கேள்வி இருந்தது. அந்தக் கேள்விகளுக்கு நெத்தியடியாக பதிலை சொன்னது, மதுரையில் திரண்ட லட்சக்கணக்கான கூட்டம்.