
ஹைதராபாத்: ஹைதராபாத் கூகட்பல்லி சங்கீத்நகர் பகுதியை சேர்ந்த கிருஷ்ணா – ரேணுகா தம்பதிக்கு 6-ம் வகுப்பு படிக்கும் சகஸ்ரா (11) என்கிற மகளும், 2-ம் வகுப்பு படிக்கும் 7 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.
கடந்த திங்கட்கிழமை 18-ம் தேதி காலை வழக்கம்போல் கிருஷ்ணாவும், ரேணுகாவும் பணிக்கு சென்றனர். 7வயது மகனும் பள்ளிக்கு சென்றான். ஆனால், ஸ்போர்ட்ஸ் டே வை முன்னிட்டு மகள் சகஸ்ரா மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.