
இயக்குநரும் நடிகருமான எஸ்.ஜே.சூர்யா, கடந்த சில வருடங்களாக நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். இப்போது, ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’, ‘சர்தார் 2’ உள்பட சில படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் 10 வருடங்களுக்குப் பிறகு அவர் மீண்டும் படம் இயக்குகிறார். முன்னதாக, 2015-ம் ஆண்டு ‘இசை’ படத்தைத் தயாரித்து, இயக்கி நடித்திருந்தார். இப்போது ‘கில்லர்’ என்ற படத்தை இயக்குகிறார். இதில் பிரீத்தி அஸ்ராணி நாயகியாக நடிக்கிறார். ஸ்ரீ கோகுலம் மூவிஸ் நிறுவனத்துடன் இணைந்து ஏஞ்சல் ஸ்டூடியோஸ் தயாரிக்கிறது.