
கயா: சிறையில் இருந்து கொண்டே கோப்புகளில் கையெழுத்திடப்படும் சம்பவங்களையும் நாம் பார்த்தோம் என எதிர்க்கட்சியினர் குறித்து பிரதமர் மோடி கிண்டல் செய்தார். சிறையில் 30 நாட்கள் இருந்தால் பிரதமர், முதல்வர்கள் மற்றும் அமைச்சர்களை பதவி நீக்கம் செய்யும் மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்தது. இதை எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்து வருகின்றன.
இந்நிலையில் பிஹாரில் ரூ.13,000 கோடி மதிப்பில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார். இதில் மின்சாரம், சாலைகள், சுகாதாரம், நகர்ப்புற கட்டமைப்பு மற்றும் குடிநீர் விநியோக திட்டங்கள் அடங்கும்.