
சென்னை: ஜிஎஸ்டி சாலையில் தனியார் கல்லூரி பேருந்து விபத்துக்குள்ளானதால் ஏற்பட்ட கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கிய பயணிகளின் வசதிக்காக, 10-க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றன.
சென்னை விமான நிலையம் அருகே பல்லாவரம் மேம்பாலத்தில் நேற்று காலை தனியார் கல்லூரி பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானது. இதனால், சென்னை விமான நிலையம் – குரோம்பேட்டை இடையே ஜிஎஸ்டி சாலையில் இரண்டரை மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.