• August 23, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: காக்கா வலிப்பு என்ற சொல்​லுக்கு நாகரி​க​மான மாற்​றுச்​சொல்லை உரு​வாக்க வேண்​டும் என மேற்கு வங்க முன்னாள் ஆளுநர் கோபால​கிருஷ்ண காந்தி வேண்​டு​கோள் விடுத்​துள்​ளார். இந்​திய கால் – கை வலிப்பு சங்​கம் (எபிலிப்​சி) சார்பில் கால் – கை வலிப்பு பராமரிப்பு மற்​றும் ஆராய்ச்சி குறித்த ‘இகான் – 2025’ என்ற தலைப்​பில் தேசிய கருத்​தரங்​கம் சென்னை எம்​ஆர்சி நகரில் உள்ள நட்​சத்​திர ஓட்​டலில் நேற்று நடந்​தது. 4 நாட்​கள் நடை​பெறும் இந்த கருத்​தரங்​கத்தை மேற்கு வங்க மாநில முன்​னாள் ஆளுநர் கோபால​கிருஷ்ண காந்தி நேற்று மாலை தொடங்கி வைத்து விழா மலரை வெளி​யிட்​டார்.

சங்​கத்​தின் தலை​வர் பி.சதீஷ் சந்​தி​ரா, பொதுச்​செய​லா​ளர் பிந்து மேனன், இந்​திய கால் – கை வலிப்பு சொசைட்டி தலை​வர் சரத் சந்​தி​ரா, பொதுச்​செய​லா​ளர் விநயன், இகான் 2025 அமைப்​பின் தலை​வர் நடராஜன், செய​லா​ளர் மால்​கம் ஜெய​ராஜ் உட்பட இந்தியா மற்​றும் வெளி​நாடு​களில் இருந்து முன்​னணி நரம்​பியல் நிபுணர்​கள், வலிப்பு நோய்​களின் ஆராய்ச்​சி​யாளர்​கள் மற்​றும் துறை சார்ந்த மருத்​துவ நிபுணர்​கள் கலந்து கொண்​டனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *