• August 23, 2025
  • NewsEditor
  • 0

மதுரை: நீர்​நிலை ஆக்​கிரமிப்​பாளர்​கள் மீது கருணை காட்ட முடி​யாது. நீர்​நிலை ஆக்​கிரமிப்​பு​களை முழு​மை​யாக அகற்​றி, மக்​கள் நலனுக்​காக அவற்​றைப் பாது​காக்க வேண்​டும் என உயர் நீதி​மன்ற நீதிப​தி​கள் தெரி​வித்​தனர். மதுரை உள்​ளிட்ட பல்​வேறு இடங்களில் நீர்​நிலைகளில் உள்ள ஆக்​கிரமிப்​பு​களை அகற்​றக் கோரிய வழக்​கு, உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் நீதிப​தி​கள் எஸ்.எம்​.சுப்​பிரமணி​யம், ஜி.அருள்​முரு​கன் அமர்​வில் விசா​ரணைக்கு வந்​தது.

அப்​போது நீதிப​தி​கள், “நீர்​நிலைகளில் ஆக்​கிரமிப்​பு​களை அனு​ம​திக்​கக் கூடாது. இது தொடர்​பாக உச்ச நீதி​மன்​ற​மும், உயர் நீதி​மன்ற​மும் பல்​வேறு வழக்​கு​களில் உத்​தர​வு​களைப் பிறப்​பித்​துள்​ளன. அனைத்து ஆக்​கிரமிப்​பு​களை​யும் அகற்​றி, நீர்​நிலைகளை பாது​காக்க நடவடிக்கை எடுக்க வேண்​டும்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *