
சென்னை: சைவம், வைணவத்துடன் பெண்களை தொடர்புபடுத்தி முன்னாள் அமைச்சர் பொன்முடி ஒரு விழாவில் பேசிய பேச்சுக்கு அனைத்து தரப்பிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. அவரது இந்த பேச்சு காரணமாக பொன்முடி தனது பதவியை இழக்க நேரிட்டது. பொன்முடிக்கு எதிராக 140-க்கும் மேற்பட்ட புகார்கள் போலீஸில் அளிக்கப்பட்டன.
பொன்முடியின் இந்த பேச்சு தொடர்பாக உயர் நீதிமன்ற நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தார். இந்த வழக்கு நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பாக நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.