• August 23, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: ‘பொதுவாழ்க்கையில் ஈடுபடுவோர் இலக்கணமாய் கொள்ள வேண்டிய அடிப்படை பண்புகளை கொண்ட ஒப்பற்ற தலைவர் இல. கணேசன்’ என முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி செலுத்தி உள்ளார். நாகாலாந்து ஆளுநராக இருந்த மறைந்த இல.கணேசனுக்கு பாஜக சார்பில் புகழஞ்சலி நிகழ்ச்சி சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடந்தது.

இந்த நிகழ்ச்சிக்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமை தாங்கினார். முன்னாள் மாநில தலைவர்கள் அண்ணாமலை, தமிழிசை சவுந்தரராஜன், தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச்.ராஜா, சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், வளர்மதி, பாமக, நாதக, தேமுதிக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளை சார்ந்த மூத்த நிர்வாகிகள் கலந்து கொண்டு இல.கணேசனுக்கு புகழஞ்சலி செலுத்தினர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *