
சென்னை: தமிழகத்தில் 30 சதவீத மானியத்துடன்,, உழவர் நல சேவை மையங்களை அமைக்க வேளாண் பட்டதாரிகள் முன்வர வேண்டும் என, அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அழைப்பு விடுத்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி யிருப்பதாவது: உழவர்களின் நலன் காக்கும் பல்வேறு திட்டங்கள் அரசால் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக, வேளாண் பட்டய மற்றும் பட்டப் படிப்பை முடித்த இளைஞர்களின் திறன் உழவர்களுக்கு உதவியாக இருந்து உற்பத்தியை உயர்த்தும் வகையில், முதல்வரின் உழவர் நல சேவை மையங்கள் 1,000 அமைக்கப்படும் என்று, 2025-26-ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது. இதற்காக, ரூ.42 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டது.