• August 23, 2025
  • NewsEditor
  • 0

மேட்டூர்: சேலம் மாவட்​டத்​தில் உள்ள மேட்​டூர் அணை கட்​டப்​பட்டு 91 ஆண்​டு​கள் நிறைவடைந்​து, 92-வது ஆண்​டில் நேற்று அடியெடுத்து வைத்​தது. கர்​நாடக மாநிலத்​தில் உற்​பத்​தி​யாகும் காவிரி ஆறு தமிழகம் வழி​யாகச் சென்று கடலில் கலக்​கிறது. கர்​நாடக மாநிலத்​தில் குறைந்த அளவு பகு​தி​களில் பாயும் காவிரி ஆறு, தமிழகம வழி​யாக 700 கிலோமீட்​டர் தொலைவு பயணித்​து, பூம்​பு​காரில் கடலில் கலக்​கிறது. பரு​வ​மழை​யின்​போது தண்​ணீரைத் தேக்க வழி​யின்றி விவ​சா​யிகள் வேதனை​யுற்​றனர்.

இதைக் கருத்​தில் கொண்​டு, அப்​போதைய ஆங்​கிலேய அரசு நீர்த்​தேக்​கத்​துக்​காக 1925-ல் மேட்​டூரில் அணை கட்​டும் பணி​யைத் தொடங்​கியது. வடிவ​மைப்பு மற்​றும் கண்​காணிப்பு பொறி​யாளர் கர்​னல் எல்​லீஸ் தலை​மை​யில் ஆயிரக்​கணக்​கான தொழிலா​ளர்​கள் அணை கட்​டு​மானப் பணி​யில் ஈடு​பட்​டனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *