
மேட்டூர்: சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணை கட்டப்பட்டு 91 ஆண்டுகள் நிறைவடைந்து, 92-வது ஆண்டில் நேற்று அடியெடுத்து வைத்தது. கர்நாடக மாநிலத்தில் உற்பத்தியாகும் காவிரி ஆறு தமிழகம் வழியாகச் சென்று கடலில் கலக்கிறது. கர்நாடக மாநிலத்தில் குறைந்த அளவு பகுதிகளில் பாயும் காவிரி ஆறு, தமிழகம வழியாக 700 கிலோமீட்டர் தொலைவு பயணித்து, பூம்புகாரில் கடலில் கலக்கிறது. பருவமழையின்போது தண்ணீரைத் தேக்க வழியின்றி விவசாயிகள் வேதனையுற்றனர்.
இதைக் கருத்தில் கொண்டு, அப்போதைய ஆங்கிலேய அரசு நீர்த்தேக்கத்துக்காக 1925-ல் மேட்டூரில் அணை கட்டும் பணியைத் தொடங்கியது. வடிவமைப்பு மற்றும் கண்காணிப்பு பொறியாளர் கர்னல் எல்லீஸ் தலைமையில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் அணை கட்டுமானப் பணியில் ஈடுபட்டனர்.