
மதுரை: தமிழகம் முழுவதும் உள்ள கைவிடப்பட்ட குவாரிகளை வேலி அமைத்து பாதுகாப்பது தொடர்பான செயல் திட்டத்தை தாக்கல் செய்யுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. மதுரை சொக்கிகுளத்தைச் சேர்ந்த சத்தியமூர்த்தி, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: தமிழக கனிமவளச் சட்டத்தின்படி கைவிடப்பட்ட குவாரிகளை பராமரிப்புச் செய்வதற்காக பசுமை நிதி உருவாக்கப்பட்டது.
இந்த நிதியில் கைவிடப்பட்ட குவாரிகளைப் பராமரிக்கவும், கண்காணிக்கவும் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் கனிமவள உதவி இயக்குநர், மாவட்ட வருவாய் அலுவலர், பொதுப்பணித்துறை செயற் பொறியாளர், சுற்றுச் சூழல் அலுவலர், மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலர், தீயணைப்பு துறை அலுவலர் அடங்கிய குழு அமைக்கப்படும்.