• August 22, 2025
  • NewsEditor
  • 0

நாகர்கோவில்: கன்னியாகுமரி தெற்கு ஆழ்கடல் பகுதியில் எண்ணெய் மற்றும் எரிவாயு எடுக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடக் கோரி கடியபட்டணம் மீனவ கிராமத்தில் மீனவர்கள் வேலை நிறுத்தம் செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

குமரி ஆழ்கடல் பகுதியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மணவாளக்குறிச்சி அருகே கடியபட்டணம் கடற்கரை கிராமத்தில் இன்று மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாமல் வேலைநிறுத்த போராட்டம் செய்தனர். கடியபட்டணம் பேதுரு பவுல் ஆலயம் முன்பிருந்து திரளான பெண்கள் உள்பட மீனவர்கள் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு கைவிட வலுயுறுத்தி கைகளில் பதாகைகள் ஏந்தி கோஷமிட்டபடி பேரணி சென்றனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *