
“அதிமுக ஆட்சியில் அடிக்கல் நாட்டப்பட்டு கட்டிமுடிக்கப்பட்ட ஆட்சியர் அலுவலக கட்டிடத்தை கத்தரிக்கோலால் ரிப்பன் வெட்டி திறந்து வைக்க ஸ்டாலினுக்கு கை வலிக்கிறதா?” – அண்மையில் தென்காசி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தான் இப்படியொரு கேள்வியை எழுப்பினார்.
நெல்லை மாவட்டத்திலிருந்து 2019-ல் தென்காசி மாவட்டம் தனியாக பிரிக்கப்பட்டது. இதையடுத்து தென்காசியில் புதிதாக கட்டிமுடிக் கப்பட்ட ஆட்சியர் அலுவலகம் 2 ஆண்டுகளாக திறக்கமுடியாமல் கிடப்பதைத்தான் இப்படி காட்டமாக சுட்டிக்காட்டினார் பழனிசாமி. ஆனால் தென்காசி மக்களைக் கேட்டால், இது கதையே வேறல்ல… என்று விரிக்கிறார்கள்.